ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி நாயகன் பாலகிருஷ்ணா. மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான என்டிஆர் மகன். அவரது அப்பா ஆரம்பித்த கட்சியான தெலுங்கு தேசக் கட்சியில் இருக்கிறார்.
தற்போது நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் சுமார் 32 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.
தெலுங்கு தேசக் கட்சி சார்பா 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 2019ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
1985 முதல் 1994 வரையில் அவரது அப்பா என்டிஆர் அதே தொகுதியில் நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். தனது அப்பாவின் சாதனையைத் தற்போது சமன் செய்துள்ளார் பாலகிருஷ்ணா. 1996ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் பாலகிருஷ்ணாவின் சகோதரர் ஹரி கிருஷ்ணா வெற்றி பெற்றிருந்தார்.
1985ம் ஆண்டு முதல் அந்தத் தொகுதியில் தெலுங்கு தேசக் கட்சி மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.