இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1980ல் மூடுபனி என்ற படத்தில் அறிமுகமானவர் மோகன். அதன் பிறகு ஒரு 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக திகழ்ந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மோகன், தான் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். அதோடு நல்ல நடிகை. நான் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரிடத்தில் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனபோதிலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருக்கக் கூடியவர்'' என்று தெரிவித்துள்ளார் மோகன்.