தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் 'மகாராஜா'. இது அவரின் 50வது படம். 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் 'மகாராஜா' பட விளம்பரம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி கண்கலங்கினார். அதற்கு காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே புர்ஜ் கலிபாவின் அருகில் உள்ள இடத்தில் தான் விஜய்சேதுபதி கட்டிட பணியாளராக பணியாற்றினார். இப்போது தனது 50வது படத்தின் மூலம் புர்ஜ் கலிபாவின் உச்சியில் மின்னினார்.