ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

கன்னடத் திரையுலகத்தில் 'சேலஞ்சிங் ஸ்டார்' என அழைக்கப்படுபவர் தர்ஷன். மைசூரில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் கர்நாடக போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
சித்ரதுர்காவைச் சேர்ந்து ரேணுகா சுவாமி என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளாராம். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 10 பேர் தர்ஷனுடன் சேர்த்து கைதாகி உள்ளனர்.
தர்ஷனுக்கு நெருக்கமான நடிகை பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து தரக்குறைவான கமெண்ட்டுகள், சம்பந்தமில்லாத மெசேஜ்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். மைசூரில் உள்ள காமாட்சி பல்யா என்ற இடத்தில் ரேணுகா சுவாமி இறந்து கிடந்துள்ளார். முதலில் அதை தற்கொலை என நினைத்துள்ளார்கள். ஆனால், விசாரணையில் அவர் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
தர்ஷன் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கும் நடிகை பவித்ரா கவுடாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தர்ஷன் கைது கன்னடத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.