விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
குரங்கு பொம்மை படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பெயர் பெற்றதுடன் ரசிகர்களை கவனிக்க வைத்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவரது இரண்டாவது படமாகவும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகவும் தற்போது வெளியாகி உள்ளது மகாராஜா. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமல்ல கமர்சியல் ரீதியாகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மகாராஜா திரைப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக குரங்கு பொம்மை திரைப்படத்தில் தனது தந்தையை (பாரதிராஜா) கொன்றவனை நாயகன் விதார்த் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களையும் வெட்டி விட்டு ஒன்றுக்கும் உதவாத நடைப்பிணமாக மாற்றுவார். அந்த அயோக்கியனின் மனைவி தனது முன்பாகவே வேறு ஒருவனுடன் சல்லாபிப்பதை பார்த்தும் கூட எதுவும் செய்ய முடியாமல் கண்களில் நீர் வழிவது போன்று ஒரு மானசீக தண்டனையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
அதேபோல மகாராஜா படத்திலும் வில்லனான அனுராக் காஷ்யப், விஜய் சேதுபதியை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு செய்த ஒரு செயல் நீயெல்லாம் ஒரு மனிதனா என்று அவரையே கதற வைத்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முடிவுக்கு உந்தி தள்ளும் விதமாக ஒரு வித்தியாசமான தண்டனையை கொடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன்.
அவரை பொறுத்தவரை கொடூரமான வில்லன்கள் உடனே சாவதை விட மானசீகமான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை தன்னுடைய படங்களில் அடிநாதமாக வைத்திருக்கிறார் என்பது இந்த இரண்டு படங்களில் இருந்தும் தெரிகிறது.