தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பிரபாஸ் உடன் சலார் படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் அடுத்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் அவரது மகளாக நடிக்கப் போகிறார். சோசியல் மீடியாவில் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை அடுத்து, இப்படி தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதோடு வட இந்தியாவில் உள்ளவர்கள் தென்னிந்தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. காமெடிக்காக கூட அப்படி சொல்லாதீர்கள். அப்படி சொன்னால் மூடிட்டு போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன் என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான், தெலுங்கு நடிகர் ராம்சரணை அழைத்தபோது இட்லி, வடை, சாம்பார் என கூறி அழைத்தார். இப்படி ராம்சரணை ஷாருக்கான் கிண்டலாக குறிப்பிட்டது அப்போது வைரலாகி வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ருதிஹாசன் இப்படி ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் என்று தெரிகிறது.