பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

தமிழ் நடிகரான விஜய் சேதுபதி, ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் வில்லனாகவும், அதற்குப் பிறகு 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற ஹிந்திப் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
தமிழில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' படம் பெரும் வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. இப்படத்தை அடுத்து 'ஏஸ், டிரைன்' ஆகிய படங்கள் அவர் நடிப்பில் வெளியாக உள்ளன.
தமிழில் தொடர்ந்து வெற்றி பெறாமல் போனதற்கு மற்ற மொழிகளிலும் நடித்ததுதான் காரணம் என நினைத்த விஜய் சேதுபதி, இனி மற்ற மொழிகளில் நடிப்பதைத் தவிர்க்க முடிவெடுத்தார். இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் விஜய் சேதுபதியை சென்னைக்கு வந்து சந்தித்துப் பேசினார். அப்போதே இருவரும் இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.
இப்போது அது உறுதி செய்யப்பட்டுவிட்டதாம். ஹிந்தியில் தயாராக உள்ள அந்தப் படத்தில் நானா படேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.