ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இன்றைய பல பிரம்மாண்டங்களுக்கு எப்போதோ அஸ்திவாரம் போட்டவர். அவருடைய பிரம்மாண்ட வழியைத்தான் இன்றைய பல தெலுங்கு, ஹிந்தி இயக்குனர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.
தமிழில் 'இந்தியன் 2' படத்தை முடித்துள்ள ஷங்கர் தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கி வருகிறார். 'இந்தியன் 2' படம் அடுத்த வாரம் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது. 'கேம் சேஞ்சர்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் நடைபெற வேண்டி உள்ளதாம். அதை முடித்த பின் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரலாம். அடுத்து 'இந்தியன் 3' படமும் வெளியாக உள்ளது.
இந்த படங்களின் வேலைகள் அடுத்த சில மாதங்களில் முடிந்துவிடும். அதற்கடுத்து என்ன மாதிரியான படங்களை இயக்க உள்ளேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சரித்திரக் கதை, ஜேம்ஸ் பான்ட் படம் மாதிரியான கதை, ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதை என மூன்று கதைகளை வைத்துள்ளாராம் ஷங்கர். ஆனால், மூன்று படங்களுமே அதிக பொருட்செலவில் எடுக்க வேண்டியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். அந்தப் படங்களில் அதிக விஎப்எக்ஸ் காட்சிகள், புதிய தொழில்நுட்பம் ஆகியவை இருக்கும் என்று கூறியுள்ளார்.