தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

முத்தமிழ் படைப்பகம் சார்பில் ஏ.ஜே.பிரபாகரன் தயாரிக்கும் படம் 'சிங்காநல்லூர் சிக்னல்'. அறிமுக இயக்குநர் ஜே.எம்.ராஜா இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பவ்யா ட்ரிக்கா நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஹரிசங்கர், ஸ்ரீமன், ஷைன் டாம் சாக்கோ, ஹரீஷ் பேரடி, நிகில் தாமஸ், அயாஸ் கான், பிரதோஷ் ஜெனிபர், சித்ரா லட்சுமணன், ஸ்ரீ ரஞ்சினி, அஜய் கோஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படம் பற்றி இயக்குனர் ராஜா கூறியதாவது : ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை, கலக்கலான காமெடி கலந்து, அனைவரும் ரசிக்கும்படியான பேமிலி என்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறோம். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை கோவையில் நடக்கிறது என்றார்.