இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் அஷ்வின் குமார். அதன்பின் உடனடியாக அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'என்ன சொல்லப் போகிறாய்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது அவருக்கு எதிராக அமைந்து, அவரது ஆரம்பத்தையே ஆட்டி வைத்தது. “நான் கதை கேட்கும் போது நல்லா இல்லைன்னா தூங்கிடுவேன். 40 கதைக்கும் மேல் கேட்டு நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இதுதான்,” என அப்போது அவர் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. பல உதவி இயக்குனர்கள் அவரைக் கண்டித்தார்கள். மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அப்படத்திற்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் 'செம்பி' படத்தில் நடித்தார். அப்படமும் ஓடவில்லை. தற்போது முன்னாள் டிவி தொகுப்பாளரும், 'புத்தகம்' படத்தை இயக்கியவருமான விஜய் ஆதிராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்க உள்ள 'நொடிக்கு நொடி' படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் அஷ்வின் குமார்.
அவரை தூங்கவிடாமல் 'நொடிக்கு நொடி' விழிப்புடன் இருக்கும்படியான கதையைச் சொல்லியிருப்பார் விஜய் ஆதிராஜ் எனத் தெரிகிறது. படம் வரும் வரை பொறுத்திருப்போம்.