விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தமிழ் சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிப்பிக்குள் முத்து, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். சக நடிகையான சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார். அதன் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டேநிண்டா குடிகண்டலு என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா நம்பர் 1 தொடரில் நடித்த தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தோசை மாவில் சாரி என எழுதி மன்னிப்பு கேட்கும் விஷ்ணுகாந்த்தின் பதிவு இணையத்தில் வைரலானது. அவர் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார் என ரசிகர்கள் குழம்ப, அந்த பதிவில் விஷ்ணுகாந்தின் கெட்டப் பாலு கதாபாத்திரம் போல் உள்ளதால், சீரியல் படப்பிடிப்பிற்காக எடுத்த வீடியோவை தான் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.