ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் யுவராஜ் நேத்ரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெசஸ் கேர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மனைவி தீபாவும், மூத்தமகள் அபிநயாவும் கூட சீரியல்களில் நடித்து வருகிறார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் சிறப்பாக நடித்து வந்த நேத்ரன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அப்போது கல்லீரலிலும் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
நேத்ரனின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அபிநயா தனது தந்தை சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நேத்ரன் பூரண நலம் பெறுவார் மீண்டும் சீரியல் நடிப்பார் என நேத்ரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.