தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழ் சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிப்பிக்குள் முத்து, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். சக நடிகையான சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார். அதன் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டேநிண்டா குடிகண்டலு என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா நம்பர் 1 தொடரில் நடித்த தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தோசை மாவில் சாரி என எழுதி மன்னிப்பு கேட்கும் விஷ்ணுகாந்த்தின் பதிவு இணையத்தில் வைரலானது. அவர் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார் என ரசிகர்கள் குழம்ப, அந்த பதிவில் விஷ்ணுகாந்தின் கெட்டப் பாலு கதாபாத்திரம் போல் உள்ளதால், சீரியல் படப்பிடிப்பிற்காக எடுத்த வீடியோவை தான் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.