பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
தொலைக்காட்சி பிரபலமான தங்கதுரை தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டும் இந்த வேளையில் அடுத்ததாக அவர் செய்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. புது காரை வாங்கிய தங்கதுரை அந்த காரில் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் செல்லாமல் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று புதுத்துணி, உணவு வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார். தனது சுய சம்பாத்தியத்தில் ஏற்கனவே 3 ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் தங்கதுரை தற்போது ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் செய்துள்ள இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.