இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டின் டாப் வசூல் நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவருடைய மகன் ஆர்யன் கான் தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருகிறார். சமீபத்தில் தெற்கு டில்லி பகுதியில் உள்ள பன்ச்ஷீல் பார்க் என்ற இடத்தில் ஆர்யன் இரண்டு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவற்றின் மதிப்பு 37 கோடி ரூபாயாம்.
அந்த இடத்தில்தான் ஆர்யனின் பெற்றோர் ஷாரூக்கான், கவுரி ஆகியோர் ஒரு காலத்தில் வசித்துள்ளார்கள். அந்த இடத்தில் ஏற்கெனவே அவர்களுக்கு 27 ஆயிரம் அடி சதுர பரப்பில் வில்லா வீடு ஒன்றும் உள்ளதாம். 2001ல் சுமார் 13 கோடி ரூபாய்க்கு அந்த வீட்டை வாங்கியுள்ளார்கள்.
பெற்றோர் வசித்த இடத்தில் தனக்கும் வீடு வேண்டும் என்பதற்காக ஆர்யன் அந்த இடத்தை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். கடந்த மே மாதம் 2024ல் பத்திரப் பதிவு நடந்துள்ளதாகவும், அதற்கான கட்டணமாக 2.64 கோடி செலுத்தியுள்ளார் ஆர்யன் என்றும் செய்திகள் வந்துள்ளன.
ஷாரூக்கான், கவுரி இருவரும் டில்லியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். டீன் ஏஜ் வயதிலேயே இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஷாரூக், இந்து மதத்தைச் சேர்ந்த கவுரி இருவரும் பல எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது இந்திய சினிமாவின் டாப் தம்பதிகளில் ஒருவராக உள்ளனர்.