இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபட்டி. அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார் ராணா. சமீபத்தில் சிகாகோ பயணம் மேற்கொண்டிருந்த ராணா அங்கிருந்து ஊர் திரும்பும்போது சிகாகோவில் நடைபெற்ற ஒரு ரசிகருடனான சந்திப்பு சோசியல் மீடியாவில் வீடியோவாக வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதாவது சிகாகோவில் இருந்து கிளம்புவதற்காக விமான நிலையத்தை நோக்கி ராணா காரில் வந்திருக்கிறார். அப்போது பின் தொடர்ந்து வந்த காரில் இருந்து ஒரு ரசிகர் கண்ணாடியை இறக்கி ராணாவிற்கு ஹாய் சொல்கிறார். இதனை தொடர்ந்து காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்குகிறார் ராணா.
பின்தொடர்ந்து வந்த காரில் இருந்து அந்த ரசிகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் ராணாவின் இந்த செயலால் இன்ப அதிர்ச்சி அடைந்து காரில் இருந்து இறங்கி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களது காரின் பானெட்டிலும் ரசிகரின் சட்டையிலும் ஆட்டோகிராப் போட்டு தந்தார். ரசிகரை பார்த்ததும் ஒரு ஹாய் கூட சொல்லாமல் கார் கண்ணாடியை இறக்காமல் செல்லும் சில ஹீரோக்களுக்கு மத்தியில் ரசிகரை மதித்து அதுவும் வெளிநாட்டில், ராணா இப்படி நடந்து கொண்ட செயல் நெட்டிசன்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.