2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
சினிமாவில் கிருஷ்ணர் வேடம் போட்டு ஆந்திர மக்களின் கிருஷ்ணராகவே மாறியவர் என்.டி ராமராவ். ஆனால் அடிப்படையில் அவர் நடிக்க விரும்பியது ராவணனாக. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த 'புகைலாஸ்' என்ற தெலுங்கு படத்தில் ராவணனாக நடித்தார். அந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரது கேரக்டரும் பேசப்பட்டது. ராவணன் ஒரு சிறந்த அறிஞர், இசைக்கலைஞர், சிவபெருமானின் தீவிர பக்தர், பெரும் நற்குணங்களை கொண்டவர். ஆனாலும் அவரை வீழ்த்தியது பெண்ணாசை. இந்த கேரக்டர் என்.டி ராமராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த புராண படங்களில் ராவணனாக நடிக்க விரும்பினார்.
இதற்கு தாமதமாகவே தானே சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'சீதாராம கல்யாணம்'. சீதை, ராமனின் திருமணத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் ராவணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படமாக வெளிவந்தது.
என்டிஆரின் நண்பரான தனேகுல புச்சி வெங்கட கிருஷ்ண சவுத்ரி படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டி ராமராவ் தயாரித்த முதல் படம் இது. இந்த படத்தை என்.டி.ராமராவ் இயக்கினார் என்றும், ஆனால் டைட்டில் கார்டில் தனது நண்பரின் பெயரை போட்டு கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.