தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமாவில் கிருஷ்ணர் வேடம் போட்டு ஆந்திர மக்களின் கிருஷ்ணராகவே மாறியவர் என்.டி ராமராவ். ஆனால் அடிப்படையில் அவர் நடிக்க விரும்பியது ராவணனாக. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த 'புகைலாஸ்' என்ற தெலுங்கு படத்தில் ராவணனாக நடித்தார். அந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரது கேரக்டரும் பேசப்பட்டது. ராவணன் ஒரு சிறந்த அறிஞர், இசைக்கலைஞர், சிவபெருமானின் தீவிர பக்தர், பெரும் நற்குணங்களை கொண்டவர். ஆனாலும் அவரை வீழ்த்தியது பெண்ணாசை. இந்த கேரக்டர் என்.டி ராமராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த புராண படங்களில் ராவணனாக நடிக்க விரும்பினார்.
இதற்கு தாமதமாகவே தானே சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'சீதாராம கல்யாணம்'. சீதை, ராமனின் திருமணத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் ராவணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படமாக வெளிவந்தது.
என்டிஆரின் நண்பரான தனேகுல புச்சி வெங்கட கிருஷ்ண சவுத்ரி படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டி ராமராவ் தயாரித்த முதல் படம் இது. இந்த படத்தை என்.டி.ராமராவ் இயக்கினார் என்றும், ஆனால் டைட்டில் கார்டில் தனது நண்பரின் பெயரை போட்டு கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.