ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு மலையாள நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று சினிமா பெண் கலைஞர்கள் அமைப்பினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்கள். இதில் நடிகைகள் ரேவதி, ரீமா கல்லிங்கல், இயக்குனர்கள் தீதி தாமோதரன், பீனா பால் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து ரீமா கலிங்கல் கூறும்போது "ஹேமா கமிட்டியில் தொடர் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்களது கருத்துக்களை கூறுவதற்காக முதல்வரை சந்தித்தோம். தற்போது மலையாள சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். கமிட்டி அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகைகளின் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.