ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 80 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்துள்ளார். மலையாள திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் அம்மாவாக நடித்ததுடன் மலையாள சினிமாவில் அம்மா என்றால் கடந்த 50 வருடங்களில் இவரைத்தான் கைகாட்டும் அளவிற்கு பெருமை பெற்றவர். இந்தநிலையில் நடிகை மஞ்சு வாரியர் இவரது மறைவு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளதுடன் கவியூர் பொன்னம்மாவுடனான தனது நிறைவேறாத ஆசை ஒன்றையும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் அம்மாவாக பார்த்து வளர்ந்தது கவியூர் பொன்னம்மா சேச்சியை தான். அந்த அளவிற்கு அம்மா என்றால் அவர்தான். பிறகு அவருடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு அவரது மகளாக நடிக்கும் பாக்கியம் கிடைக்கவே இல்லை என்பது மிகப்பெரிய வருத்தமாகவே இப்போது வரை இருக்கிறது. கண்ணெழுதி பொட்டும் வைத்து என்கிற படத்தில் அவருடைய தங்கையாக நான் நடித்து இருந்தேன். அதே சமயம் நான் அவரது மகளாக நடிக்காவிட்டாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு அம்மா மகளை போலவே வாழ்ந்தோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.