விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டாலா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள 'தேவரா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை (செப்-27) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். தெலுங்கில் முதல் படம் என்றாலும் ஏற்கனவே தனது அம்மா கோலோச்சிய இடம் என்பதால் தனது முதல் படத்திலேயே அழுத்தமாக முத்திரை பதிக்க வேண்டும் என்பதற்காக ஓரளவுக்கு தெலுங்கு கற்றுக்கொண்டு இந்த படத்தில் வசனம் பேசி நடித்துள்ளார் ஜான்வி கபூர்.
சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூரின் நடிப்புக்கு ஒரு சாம்பிள் பற்றி கூறினார். தெலுங்கில் ஒன்றரை பக்கம் வசனம் பேசி ஒரே டேக்கில் ஒரு காட்சியை ஓகே செய்தார் ஜான்வி கபூர். இயக்குனர் அந்த காட்சியை பார்த்து சரிதானா என்பது சொல்வதற்குள் ஜூனியர் என்டிஆர் கைதட்டி சூப்பர் என்று சொன்னதைக் கேட்டு இயக்குனர் கொரட்டாலா சிவாவே ஆச்சரியப்பட்டு போனாராம். அந்த அளவிற்கு ஜான்வி கபூர் அந்த காட்சியில் அழுத்தமாக முத்திரை பதித்துள்ளாராம். அது மட்டுமல்ல பல காட்சிகளில் நடிக்கும்போது அவரது அம்மா ஸ்ரீதேவியின் சாயல் அவரிடம் தெரிந்ததை தான் பார்க்க முடிந்தது என்றும் கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.