ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிக்பாஸ் சீசன் 8 மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான விக்ரமன் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரி என நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரமன், 'ஒரு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்னை வந்தது. அப்போது கமல்ஹாசன் நாம் அனைவரும் உழைப்பது சாப்பிட தான். அந்த சாப்பாட்டை அவருக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் அவர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறினார்.
இதுபோல் வேறு யாரும் செய்வார்களா? என்று தெரியவில்ல. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர். அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்க வேண்டும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.