ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் நேற்று (அக்-10) வெளியானது. படத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல மொழி திரையுலகை சேர்ந்த கலர்புல்லான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் ராணா நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த படத்தில் என்ட்ரி கொடுத்தாலும் பவர்புல்லான வில்லனாக நடித்திருக்கிறார்.
தெலுங்கில் 'வேட்டகாடு' என்கிற பெயரில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தாலும் கடைசி வரை அந்த டைட்டிலை பெற முடியாததால் வேட்டையன் என்கிற தமிழ் பெயரிலேயே அங்கே படம் வெளியானது. இது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஒரு பேச்சு பரவியது.
இந்த நிலையில் நடிகர் ராணாவும் தெலுங்கில் இந்த படத்தை விநியோகம் செய்திருக்கும் அவரது தந்தை சுரேஷ் பாபுவும் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய ராணா, “சமீபத்தில் வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா திரைப்படம் கூட தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் அதே பெயரில் தான் வெளியானது. இப்போதெல்லாம் ரசிகர்கள் டைட்டிலை விட கதையையும் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதையும் மட்டுமே பார்க்கிறார்கள். வேட்டையன் படத்திற்கு இங்கே பொருத்தமான டைட்டில் பெற முடியாத சூழலில் தான் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல விநியோகஸ்தர் சுரேஷ்பாபு கூறும்போது, “ஹாலிவுட்டில் வெளியாகும் அவதார், டைட்டானிக் ஆகிய படங்களை அதே டைட்டிலில் இங்கே எல்லோரும் பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் இங்கே நம் பிராந்திய மொழிகளில் தான் டைட்டில் ஒரு பிரச்னையாக பேசப்படுகிறது” என்று கூறியுள்ளார்.