சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
முன்னணி மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தற்போது தனது ரீ எண்ட்ரியில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மோகன்லாலுடன் 'ஓடியன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் மஞ்சு வாரியர் கோர்ட்டில் ஆஜராகி தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீகுமார், மஞ்சு வாரியர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வார் என்று தெரிகிறது.