2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்ளில் ஒருவர் அல்லு அர்ஜுன். கடந்த மே மாதம் ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது அவர் நந்தியால் தொகுதியில் அவருடைய நண்பர் சில்ப ரவி சந்திர கிஷோர் தெட்டி என்பவருக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது நந்தியால் ஊரில் உள்ள சில்ப ரவி இல்லத்தில் பெரும் கூட்டமாக மக்கள் திரண்டனர்.
அதற்கு எந்தவிதமான முன் அனுமதியும் பெறாமல் இருந்த சூழ்நிலையிலும் போலீஸார் அல்லு அர்ஜுனுக்கு பாதுகாப்பு வழங்கினர். அவர் சென்ற பிறகு சிலர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் அளித்தனர். அதையடுத்து அல்லு அர்ஜுன் மீதும், சில்ப ரவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அல்லு அர்ஜுன், சில்ப ரவி ஆகியோர் முறையிட்டனர். கடந்த மாதம் இது குறித்து விசாரணை செய்த நீதிமன்றம் வழக்கை நவம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இன்று அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
நந்தியால் தொகுதியில் சில்ப ரவி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அவருக்காக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை அப்போது கடுமையாக விமர்சித்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் தான் அல்லு அர்ஜுன்.