இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரையும் நடத்தி வருகிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது திரையுலக வட்டார வாட்சப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஆடியோ பதிவில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குதான் நடக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் அதிகாலை வேளைகளில் ஆரம்பமாகிறது. மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை தமிழகத்தில் ஆரம்பமாகும் நேரமான 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
மற்றொரு கோரிக்கையாக சினிமா விமர்சனங்களுக்கு நீதிமன்றத்தை அணுகி இரண்டு வார காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என தடை வாங்க வேண்டும் என்றும் வைத்துள்ளார். பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால் அதிகாலை காட்சியில் சினிமாவை பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யு டியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தை காலி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என நாமே கட்டுப்பாடு விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியதை கேள்விப்பட்டேன், அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இந்த வருடத்தில் 'இந்தியன் 2, வேட்டையன்,' படங்களும், சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கோரிக்கை பற்றி திரையுலகில் ஆலோசிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும். அதே சமயம், 'கங்குவா' படத்தின்போது இது பற்றி பேசும் திருப்பூர் சுப்பிரமணியம், 'இந்தியன் 2, வேட்டையன்' படங்கள் வந்த போது இது பற்றி ஏன் பேசவில்லை என சமூக வலைதளங்களில் பல சினிமா ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள்.