இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளிவந்த படங்களை ஆங்கில அரசு தணிக்கை செய்தது. படத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வசனமோ, காட்சிகளோ இருந்தால் அந்த படத்தை தடை செய்து விடுவார்கள். இந்த மாதிரியான நேரத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தையும், அவர்கள் இந்தியர்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றியும் வெளிவந்த படம்தான் 'மாத்ருபூமி'.
அப்போது வங்கத்தில் நடத்தப்பட்டு வந்த 'சந்திரகுப்தா' என்ற நாடகத்தைதான் திரைப்படமாக இயக்கினார் எச்.எம்.ரெட்டி. இந்த நாடகம் அலெக்சாண்டர் படையெடுப்பையும் அவரை எதிர்த்த சந்திரகுப்ப மவுரியரையும் பற்றிய கதை. அந்த கதையை அப்படியே படமாக்கி அலெக்சாண்டர் படையெடுப்பை, ஆங்கிலேயர்கள் ஆக்கிரமிப்பாகவும், அவர் செய்த அடக்குமுறைகளை ஆங்கிலேயர்களின் அடக்குமுறையாகவும், சந்திரகுப்த மவுரியரின் போராட்டத்தை சுதந்திர போராட்டமாகவும் உருவகப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டது.
இதில் டி.எஸ்.சந்தானம், பி.யூ.சின்னப்பா, டி.வி.குமுதினி, காளி என்.ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போர் காட்சிகள் செஞ்சிக்கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டையில் படமாக்கப்பட்டது. 2 ஆயிரம் பேர் நடித்தனர். இந்த படம் வெளியீட்டுக்கு தயாரானபோது தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தணிக்கை விதிமுறைகளை தளர்த்தினார். இதனால் எந்த சிக்கலும் இல்லாமல் இந்த படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.