இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி, ஜெயம் ரவி - ஆர்த்தி ஆகியோரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவரது மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்திருப்பது திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான், ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு உலகளவில் உயர்ந்தார். தற்போதும் இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 1995ல் சாய்ரா பானுவை திருமணம் செய்தார். இவர்களுக்கு கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்கள், அமீன் என்ற ஒரு மகன் உள்ளனர். 29 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிவதாக அறிவித்துள்ளனர்.
‛‛தீர்க்க முடியாத இடைவெளி உருவாகி விட்டது. இதை யாராலும் சரி செய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவது என்ற வேதனையான முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா பானு'' தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த முடிவு பற்றி ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ‛‛திருமண வாழ்வில் 30 ஆண்டுகளை தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படி ஒரு முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தை தேடுகிறோம். இதை நாங்கள் கடந்த செல்ல எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை தரும் நண்பர்களின் அன்புக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.