ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்து ஓரளவு ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள வில்லன் நடிகர் ஆன விநாயகன். ஆனால் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு டப் கொடுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இதற்கு முன் இருந்ததை விட பல மடங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதேசமயம் படங்களில் நடித்து பிரபலமாவது ஒரு பக்கம் என்றால் தேவையில்லாத பேட்டிகள், பொது இடங்களில் சண்டை, வாக்குவாதம் என இவற்றின் மூலம் தான் விநாயகன் அடிக்கடி பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார்.
அந்த வகையில் தற்போது கோவாவில் தங்கி இருக்கும் விநாயகன் அங்கு உள்ள தெருவோர கடைக்காரர் ஒருவரிடம் கடுமையான வார்த்தைகளால் சண்டை போடும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் கோவாவில் உள்ள ஒரு சாதாரண தெருவில் இருக்கும் ஒரு சின்ன கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் விநாயகன். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த வருடம் கூட விநாயகன் தனது குடும்ப விஷயம் காரணமாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார் என்பதால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.