தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்றுத்தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அதன் பின் மீண்டும் 2020 நவம்பர் மாதம் ஆரம்பித்து 2021 நவம்பர் மாதத்தில் முடித்தார்கள்.
அது போல முதல் பாகம் வெளிவந்த பின்பு அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுத்தான் முடித்தார்கள்.
இப்படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக இந்த இரண்டு பாகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் அல்லு அர்ஜுன். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், “புஷ்பா கடைசி நாள் கடைசி காட்சி படப்பிடிப்பு. புஷ்பாவின் ஐந்து வருடப் பயணம் முடிந்தது. என்ன ஒரு பயணம்…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.