ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் அடுத்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்றுத்தான் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் இரண்டாம் பாகம் வெளியாகப் போகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பை 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பித்தார்கள். ஆனால், கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தினார்கள். அதன் பின் மீண்டும் 2020 நவம்பர் மாதம் ஆரம்பித்து 2021 நவம்பர் மாதத்தில் முடித்தார்கள்.
அது போல முதல் பாகம் வெளிவந்த பின்பு அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவில்லை. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. அவ்வப்போது இடைவெளி விட்டுத்தான் முடித்தார்கள்.
இப்படத்திற்காக வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக இந்த இரண்டு பாகங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் அல்லு அர்ஜுன். நேற்றுடன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், “புஷ்பா கடைசி நாள் கடைசி காட்சி படப்பிடிப்பு. புஷ்பாவின் ஐந்து வருடப் பயணம் முடிந்தது. என்ன ஒரு பயணம்…,” எனக் குறிப்பிட்டுள்ளார்.