ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
1980களில் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்தது. ஹிந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா ஆனது. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்தார். இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.
தமிழில் 'ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட பல படங்கள் தயாரானது. தற்போது மீண்டும் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. "சில்க் ஸ்மிதா: குயின் ஆப் தி சவுத்" என்ற பெயரில் எஸ்டிஆர்ஐ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்குகிறார். விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.