கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா-2. இந்த படம் டிசம்பர் 5ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் பின்னர் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை சாம் சி.எஸ்க்கு புஷ்பா-2 படக் குழு வழங்கியது.
இந்நிலையில் அது குறித்து சாம் சி.எஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், புஷ்பா- 2 படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இந்த படத்திற்கு எனக்கு இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு நன்றி. அல்லு அர்ஜுன் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தது. எனது திரையுலக பயணத்தில் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இந்த படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ்சிலும் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக அமைந்தது என்று தெரிவித்திருக்கிறார் சாம் சி.எஸ்.