ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2989 ஏடி முதல் பாகம் வெளியானது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கதாநாயகியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட சிலர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார்கள். வரலாற்று பின்னணியில் பேண்டஸி படமாக உருவான இந்த படம் வெளியாவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு அதில் பாதி அளவிற்கு தான் அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியது. அதேசமயம் வசூல் ரீதியாக ஆயிரம் கோடி வசூலித்தது.
இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கிருஷ்ணர் கதாபாத்திரம் இடம்பெற இருக்கிறது என்றும், அதில் கிருஷ்ணராக மகேஷ்பாபு நடிக்கப் போகிறார் என்றும், சமீபநாட்களாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியது.
இதைத் தொடர்ந்து கல்கி படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் கூறும்போது, “கல்கி இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக கிருஷ்ணர் கதாபாத்திரம் இல்லாமல் தான் உருவாக்கி வருகிறோம். அதேசமயம் கிருஷ்ணரை பற்றிய ஒரு முழு நீள திரைப்படம் எடுக்க வேண்டி நாளை ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயம் அதில் மகேஷ்பாபு தான் நடிப்பார். கிருஷ்ணருக்கு அவர்தான் பொருத்தமானவர். அப்படி அவர் நடிக்கும் போது அந்த படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெறும்” என்று கூறியுள்ளார்.