ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
புத்தாண்டு தினம் உலகம் எங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டை சிங்கப்பூரில் கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் அங்கு உள்ளார். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கார் ரேஸ் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார் அஜித்.
இதேப்போல் தமிழ் சினிமாவின் இன்னொரு நட்சத்திர தம்பதியான விக்னேஷ் சிவன், நயன்தாராவும் தங்களது மகன்களுடன் துபாயில் நடிகர் மாதவன் குடும்பத்தாருடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள். மாதவன் மற்றும் அவரது மனைவியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் போட்டிங் செய்துள்ளார்கள். அது குறித்த ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அதேப்போல் புர்ஜ் கலிபா முன் எடுக்கப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட போட்டோவையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.