கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
மாமன்னன், வாழை படங்களுக்கு பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படம் கபடி விளையாட்டு வீரரை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பைசன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ்.
இந்த நேரத்தில் மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போன்று காதல் கதையில் ஒரு படத்தை இயக்குமாறு எனது மனைவி என்னிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதனால் சமூக பிரச்னைகள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையில் ஒரு படத்தை எடுத்து காட்டுவேன் என்று தனது மனைவியிடத்தில் சபதம் செய்திருப்பதாக கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.