ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடன இயக்குனர் கல்யாண் தமிழில் பல முன்னணி நடிகர்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடனம் இயக்கியுள்ளார். ஆனால், நடிகர் அஜித் குமாரின் வில்லன், மங்காத்தா, அட்டகாசம், வேதாளம், விஸ்வாசம், துணிவு தற்போது விடாமுயற்சி வரை அஜித்தின் பெரும்பாலான பட பாடல்களுக்கு நடனம் இயக்கியவர் கல்யாண்.
கல்யாண் அளித்த பேட்டியில் அஜித் குமார் குறித்து கூறியதாவது, "பைக் மீதான காதலை இப்போ வரைக்கும் அவர் கைவிடவில்லை. எப்போதும் நேசித்து கொண்டே இருக்கிறார். அப்படிபட்ட தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு தொடர்ந்து பயணித்து வருகிறேன். அதே மாதிரியும் சினிமாவையும் ரொம்ப நேசிக்கின்றார். தயாரிப்பாளர் அவரால் கஷ்டப்படக் கூடாது, நஷ்டப்படக் கூடாது என மிக கவனமாக உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் அவரால் படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என முடித்து தருவார்". என இவ்வாறு கூறினார்.