ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பொங்கல் வெளியீட்டில் பெரிய அளவிலான மோதல் எதுவும் இல்லை. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. இதற்கடுத்து சில மாதங்களுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் தனி வெளியீடாகத்தான் வர உள்ளது.
ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படமும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. அந்தப் படமும் ஏப்ரல் 10ம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளிவந்தால் அன்றைய தினம் மும்முனைப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இப்படி மூன்று படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
ஏப்ரல் வெளியீட்டிற்குப் பிறகு மே முதல் வாரத்தில் தான் படங்களை வெளியிட நாட்களைக் குறிப்பார்கள். ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்பதால் அந்த மாதத்திலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராது.