சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி, 'வணக்கம் சென்னை, காளி' படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம்ரவி, நித்யா மேனன், விநய் ராய், யோகி பாபு, ஜான் கொகைன், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படம் வருகிற 14ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். எவ்வளவு பெரிய படத்துக்கும் ஹிட் கொடுக்கிறார். 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அவர்களை தாண்டி நிலைத்து நிற்பது என்றால் திறமை இல்லாமல் நடக்காது. அதெல்லாம் செய்துவிட்டு “தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்” என்று சொல்லும் அனிருத்தின் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது. உங்களுடைய வெற்றிக்கு பாராட்டுகள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால் இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய் சேரும்'' என்று குறிப்பிட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அனிருத் மேற்கத்திய பாடல்களை தழுவியே தனது படங்களின் பாடல்களை உருவாக்கி வருகிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.