ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இங்கே ரஜினி, கமல் போல தெலுங்கு திரையுலகிலும் இன்னும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என்கிற சீனியர்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பு, ஆக்ஷ்ன், டான்ஸ், வசனம் என எல்லாவற்றிலும் யார் என்ன நினைத்தால் என்ன என நினைக்காமல் தன்னுடைய ஸ்டைலில் படத்திற்கு படம் பட்டையை கிளப்பி வருகிறார். சொல்லப்போனால் ஒரு பக்கம் ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும் கூட அவரது செயல்களை ரசிக்கவே செய்கிறார்கள். இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் டாக்கு மகாராஜ் என்கிற படம் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரவுட்டேலா நடித்துள்ளார். தமிழில் லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து ஒரு டபிடி டிபிடி என்கிற ஒரு பாடலில் அதிரடி நடனமாடி இருக்கிறார் ஊர்வசி. இந்த காட்சியில் பல கவர்ச்சிகரமான நடன அசைவுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் ரசிகர்கள் பலர் இந்த நடன காட்சியை குறிப்பிட்டு பாலகிருஷ்ணாவுக்கு ஊர்வசிக்குமான 30 வருட வயது இடைவெளி இருக்கும்போது இப்படி ஒரு நடனம் தேவையா என்பது போல விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா ரசிகர்களின் விமர்சனத்துக்கு அளித்துள்ள பதிலில், “நான் கலையை கலையாக மட்டுமே பார்க்கிறேன். பாலகிருஷ்ணா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அப்படிப்பட்டவருடன் இந்த கலையில் இணைந்து பயணித்ததை ஒரு நல்ல அனுபவமாக தான் நினைக்கிறேன். அது வெறும் நடனம் மட்டும் அல்ல. கலையை, கடின உழைப்பை, அதன் மரியாதையை கொண்டாடுவது போலத்தான், கலையை கலையாக பாருங்கள்” என்று கூறியுள்ளார்.