தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக அசத்தி வருபவர் சாய் பல்லவி. தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் தமிழில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தெலுங்கில் நாகசைதன்யா உடன் தண்டேல் என்ற படத்தில் நடித்துள்ளார். மீனவர்கள் பின்னணியில் உருவாகி உள்ள இப்படம் பிப்., 7ம் தேதி திரைக்கு வருகிறது.
சாய் பல்லவி கூறுகையில், "நான் பொது இடங்களுக்கு செல்லும் போது பலர் திடீரென அவர்களின் அலைப்பேசி மூலம் என்னை போட்டோ எடுப்பார்கள். அது எனக்கு பிடிக்காது. நான் மரமோ அல்லது விலை உயர்ந்த கட்டிடங்களோ அல்ல. உயிர் உள்ள மனுஷி. உங்களோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என கேட்டு எடுத்தால் நல்லது. என்னை சுற்றி அதிக கூட்டம் இருந்து எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டு இருந்தால் எனக்கு பயமாகவும், கூச்சமாகவும் இருக்கும். அளவுக்கு மீறிய வகையில் எதையாவது யோசிப்பேன். இந்த பழக்கத்தை கைவிட தினமும் தியானம் செய்கிறேன். எல்லாற்றுக்கும் மேலாக குறைந்த மேக்கப் உடன் சம்பிராதய முறைப்படி இருக்க விரும்புகிறேன்'' என்றார்.