சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராஜமவுலி இயக்க உள்ள படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான கதை விவாதம் மற்றும் முன் தயாரிப்புப் பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் வந்திருந்தார் பிரியங்கா. படத்திற்கான பேச்சுவார்த்தை, ஒப்பந்த வேலைகளுக்காக வந்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இயக்குனர் ராஜமவுலி நேற்று சிங்கத்தின் புகைப்படம் ஒன்றின் முன் கையில் பாஸ்போர்ட் உடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கமெண்ட் செய்திருந்தனர். இதன் மூலம் பிரியங்கா இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இருவரது கமெண்ட்டுக்கும் ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.