படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் ‛புஷ்பா 2'. இதன் முதல் பாகம் 400 கோடி வசூலித்த நிலையில், 2வது பாகம் உலகளவில் 1830 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றிக்கு வித்திட்ட படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூன், இயக்குனர் சுகுமார் குறித்து உருக்கமாக பேசினார்.
அல்லு அர்ஜூன் பேசுகையில், ‛‛சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சரியான பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். ஒரு படத்தின் பாடல் வரிகள், இசை என எதுவாக இருந்தாலும் அது இயக்குனரின் மேற்பார்வையில் தான் இருக்கும். ஆனால், அதன் வெற்றி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தான் செல்லும். அனைத்துக்கும் சுகுமாருக்கு நன்றி'' எனப் பேசினார் அல்லு அர்ஜூன்.
அல்லு அர்ஜூனின் பேச்சைக்கேட்ட சுகுமார் கண்கலங்கினார். இதனை பார்த்த அல்லு அர்ஜூன், ‛‛நீங்களும் கண்கலங்கி என்னையும் கண்கலங்க வைக்காதீர்கள்'' என கேட்டுக்கொண்டார். மேலும், ‛‛இந்த படத்தின் வெற்றியை எனது ரசிகர்களுக்கு உரித்தாக்குகிறேன். இன்னும் அவர்களை பெருமைப்படுத்துவேன். புஷ்பா 3 பற்றி எனக்கும் சுகுமாருக்கும் தெரியாது. அப்படத்தின் மீதிருக்கும் எனர்ஜியை உணர்கிறேன்,'' என்றும் பேசினார்.