ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என இளைஞர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதன் டிரைலர் இன்று வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தைப் பார்த்தேன். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்கமான காதல் கதையை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த வழக்கமான காதல் கதையில் தனுஷ் உருவாக்கியிருக்கும் உலகம் என்னை மிகவும் குதூகலப்படுத்தியது. இந்த குதூகலமும், உற்சாகமும் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கையின் அதீத மகிழ்ச்சிகள் அனைத்தும் காதல் என்ற அப்பாவிதனத்தால் தான் கிடைக்கிறது. இயக்குனர் தனுஷூக்கு எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.