ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படம் பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தை இயக்கிய திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகின.
இதனிடையே, அட்லி இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வர ஆரம்பித்தன. சல்மான்கானுக்காக கதை எழுதி வந்த அட்லி, அதன் பட்ஜெட் அதிகமானதால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள். அந்த பட்ஜெட்டிற்கு அல்லு அர்ஜுன் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என பேசி முடிவெடுத்தார்கள் என்றும் செய்திகள் வந்தது.
பாலிவுட் மீடியாக்கள் இந்தப் படம் பற்றி கூடுதலாக அப்டேட்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள். படத்தின் நாயகியாக நடிக்க ஜான்வி கபூரிடம் பேசியுள்ளதாகவும், ஹிந்தி நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், அல்லு அர்ஜுன் அப்பா கதாபாத்திரத்தில் சீனியர் தமிழ் நடிகர் நடிக்கப் போகிறார் என்றும் சொல்கிறார்கள். இசையமைப்பதற்கு சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்.
ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவி வருகிறது.