வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
'மஹா சிவராத்திரி' இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் டூரிங் டாக்கீஸ்கள் இருந்தபோது ஒரே டிக்கெட்டில் விடிய விடிய மூன்று படங்களைக் காட்டுவார்கள். காலப் போக்கில் அவை போய்விட்டன.
தெலுங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் இன்று இரவு மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்', ஜுனியர் என்டிஆர் நடித்த 'தேவரா' ஆகிய படங்களை இரவு நேரக் காட்சியாக நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அந்தக் காட்சிகளுக்கு தெலுங்கானா அரசு அனுமதி அளிக்கவில்லை.
கடந்த வருடம் 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது நடைபெற்ற நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதனால், அங்கு அனைத்துவிதமான சிறப்புக் காட்சிகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. எனவே தான் இன்றைய சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இன்றைய சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மகேஷ்பாபு ரசிகர்களும், ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.