தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. “ஈரம், அரவான், மரகத நாணயம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்தவர் ஆதி. நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.
'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ள 'சப்தம்' படம் நாளை மறுதினம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக தெலுங்கிலும் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளார் ஆதி. அதில் ஒன்றில், “நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் ஆதராமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யு டியூப் சேனல்கள் பரப்புவது வலியைத் தருகிறது.
காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன், மனைவி ஆன பின்னும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது. போகப் போக, வருமானத்திற்காக சில யு டியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை,” என்று கூறியுள்ளார்.