வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப் போகிறார் என தகவல். ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை. அதற்குள், தனி ஆபீஸ் போட்டு பட டிஸ்கசன் பணிகளை ஆதிக் தொடங்கிவிட்டாராம். துபாய் கார் பந்தயத்தில் அஜித் பிஸியாக இருப்பதாலும், சம்பள விஷயத்தில் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாலும் பட அறிவிப்பு தள்ளிபபோவதாக தகவல்.
இந்த படத்துக்கு 180 கோடிவரை சம்பளம் வாங்கப்போகிறார் அஜித். இது அவருடைய சினிமா கேரியரில் இதுவரை வாங்காத சம்பளம் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி இருக்கிறார். அடுத்து விஜய் இருந்தார். இப்போது அவர் அரசியலுக்கு செல்வதால், அடுத்த ஆண்டு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் 2வது இடத்துக்கு அஜித் முன்னேறிவிடுவார் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தவிர மற்ற யாரும் இன்னமும் 100 கோடி சம்பளத்தை தாண்டவில்லை. அதேபோல் குட்பேட்அக்லி வெற்றி காரணமாக, ஆதிக் சம்பளரும் 10 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவே 270 கோடியை தாண்டும் என்பதால், அஜித்தின் இந்த படம் பிஸினஸ் ரீதியாக பெரிய ரிஸ்க் என்று சொல்லப்படுகிறது.