தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப் போகிறார் என தகவல். ஆனால், இன்னமும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை. அதற்குள், தனி ஆபீஸ் போட்டு பட டிஸ்கசன் பணிகளை ஆதிக் தொடங்கிவிட்டாராம். துபாய் கார் பந்தயத்தில் அஜித் பிஸியாக இருப்பதாலும், சம்பள விஷயத்தில் இன்னும் சில சிக்கல்கள் இருப்பதாலும் பட அறிவிப்பு தள்ளிபபோவதாக தகவல்.
இந்த படத்துக்கு 180 கோடிவரை சம்பளம் வாங்கப்போகிறார் அஜித். இது அவருடைய சினிமா கேரியரில் இதுவரை வாங்காத சம்பளம் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி இருக்கிறார். அடுத்து விஜய் இருந்தார். இப்போது அவர் அரசியலுக்கு செல்வதால், அடுத்த ஆண்டு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் 2வது இடத்துக்கு அஜித் முன்னேறிவிடுவார் என்று கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தவிர மற்ற யாரும் இன்னமும் 100 கோடி சம்பளத்தை தாண்டவில்லை. அதேபோல் குட்பேட்அக்லி வெற்றி காரணமாக, ஆதிக் சம்பளரும் 10 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளதாம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவே 270 கோடியை தாண்டும் என்பதால், அஜித்தின் இந்த படம் பிஸினஸ் ரீதியாக பெரிய ரிஸ்க் என்று சொல்லப்படுகிறது.