சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடிகர்கள் மோகன்லால் - சீனிவாசன் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வந்திருக்கின்றன. இதில் பல படங்களுக்கு சீனிவாசனே கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோகன்லாலும், சீனிவாசனும் இணைந்து நடித்த 'ஒரு நாள் வரும்' என்கிற திரைப்படம் கடந்த 2010ல் வெளியானது. அதன்பிறகு கடந்த 15 வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால் இணைந்து நடிக்கவில்லை என்றும் அதன்பிறகு சீனிவாசனின் உடல்நல குறைவு காரணமாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதாலும் இவர்கள் இணைந்து நடிக்க முடியாமல் போனது என்றும் சொல்லப்பட்டது. அதே சமயம் சீனிவாசன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை மோகன்லால் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் சீனிவாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த படத்தில் நடித்து வரும் பிரேமலு புகழ் நடிகர் சங்கீத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு மில்லியன் டாலர் புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சத்யன் அந்திக்காடு இயக்கத்திலேயே மோகன்லால்-சீனிவாசன் நடித்த நாடோடிக்காட்டு திரைப்படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.