பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
'புஷ்பா 2' படம் மூலம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் பான் இந்தியா ஹீரோ அந்தஸ்துக்குப் போய்விட்டார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் குறித்து உறுதியான எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை.
தெலுங்கு இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா, அல்லது தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஆனால், சமீபத்திய அப்டேட் படி அட்லீ இயக்கத்தில்தான் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார் எனச் சொல்கிறார்கள்.
500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சரித்திரப் படமாக அப்படம் உருவாக உள்ளதாம். படத்தில் போர்வீரன் ஆக நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். அதற்காக வெளிநாடு சென்று ஒரு மாதம் பயிற்சியும் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
ஏப்ரல் மாதம் இப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என்றும் 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜான்வி கபூர் படத்தின் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.