அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. நடிகர் சரத்குமார்கூட இதுகுறித்த ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.