ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. பான் இந்தியா படமாக இப்படத்தை ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.
வெளியீட்டிற்கு முன்பாக முன்பதிவில் சாதனைகளை இந்தப் படம் படைத்தது. இன்று முதல் நாள் வசூலாக 100 கோடியைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் யு டியூப் சேனல்கள், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத அளவில் உள்ளதாக அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும் போடும் இரண்டாம் பாகத்தில் கதையே இல்லை என்று அவர்கள் குறை சொல்கிறார்கள். படத்தின் மேக்கிங் சிறப்பாக இருந்தாலும் கன்டென்ட் சிறப்பாக இல்லாததால் படம் ஆங்காங்கே போரடிக்கிறது என்பதுதான் அவர்களது ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.
மலையாள ரசிகர்கள் ரசித்தாலும் மற்ற ரசிகர்கள் படத்தை ரசிக்க முடியுமா என்பது சந்தேகம் என்றும் தெரிவிக்கிறார்கள்.